வைகாசி விசாக விழாவிற்காக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்



திருப்புல்லாணி; உச்சிப்புளி அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நடைபயணமாக திருச்செந்தூர் செல்கின்றனர். வருகிற ஜூன் 9 அன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு விழாவில் பங்கேற்பதற்காக உச்சிப்புளி சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் காவடி எடுத்தும் முருகன் பக்தி பாடல்களை பஜனை செய்து கொண்டும் திருச்செந்தூர் செல்வதற்கான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


முருக பக்தர்கள் கூறியதாவது: உச்சிப்புளி, சாத்தக்கோன்வலசை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி நேர்த்திக்கடனாக பாதயாத்திரை செல்கிறோம். காலை 20 கி.மீ., இரவில் 20 கி.மீ., என பயணத்தை திட்டமிட்டபடி நடந்து சென்று வைகாசி விசாக விழாவில் திருச்செந்தூர் சென்றடைகிறோம். பாதயாத்திரையை பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக குழுவாக இயங்கி சென்று வருகிறோம். ஓரிடத்தில் நிறுத்தி சமைத்து சாப்பிட்ட பிறகு பயணம் தொடர்கிறோம். ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர். உடலுக்கும் உள்ளத்திற்கும் இதுபோன்ற பாதயாத்திரை புத்துணர்வு அளிக்கிறது என்றனர். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்