பெங்களூரு திருப்பதி பெருமாள் கோவிலில் தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தரிசனம்



கர்நாடகா; பெங்களூரு வையாலிகாவளியிலுள்ள திருமலை திருப்பதி ஸ்ரீவாரி கோயிலுக்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு அவரது மனைவியுடன் வருகை தந்தார். கோவில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் அவரை பூர்ணகும்பத்துடன் வரவேற்றனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து இறைவனை தரிசனம் செய்த பி.ஆர். நாயுடுவிற்கு, கோவில் குருக்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து கௌரவித்தனர். வேத மந்திரங்களால் அவர்களை ஆசீர்வதித்தனர். பின்னர், அன்னபிரசாத மையத்தில் பக்தர்களுக்கு நாயுடு உணவு வழங்கினார். கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் வசதிகள் குறித்து ஊழியர்களிடம் விசாரித்து சென்றார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்