கிணத்துக்கடவு சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா; அம்மனுக்கு மகா அபிஷேகம்



கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி சக்தி மாரியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. கிணத்துக்கடவு, கோதவாடி சக்தி மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு நோன்பு சாட்டு திருவிழா நிகழ்ச்சிகள், 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி, கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. 9ம் தேதி, கணபதி ஹோமம், முளைப்பாரி எடுத்தல் மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடந்தது. 10ம் தேதி, பூவோடு விளையாட்டு, வஞ்சியம்மன் பொங்கல், சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. 11ம் தேதி, அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல், கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வு நடந்தது. 12ம் தேதி, மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று 13ம் தேதி, சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்