விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்



விருத்தாசலம்; விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று ஏழாம் நாள் உற்சவமாக திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி, ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி உற்சவர்கள் எழுந்தருளியதும், மாலை 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நாளை (14ம் தேதி) காலை 8:00 மணிக்கு தேரோட்டம், 15ம் தேதி புஷ்ப யாகம், இரவு பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. 16ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்