உத்தரகோசமங்கையில் ஜூன் 29ல் மாணிக்கவாசகர் குருபூஜை



உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நாளை ஜூன் 29ல் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடக்க உள்ளது.


உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் அக்னி தீர்த்த தெப்பக்குளம் அருகே மாணிக்கவாசகப் பெருமானுக்கு தனி சன்னதி கோயில் உள்ளது. மாணிக்கவாசகர் சைவ சமய குரவர்களில் ஒருவர். சிவபெருமானின் அடியவர்களில் ஒருவராக இவர் இயற்றிய திருவாசகமும், திருக்கோவையாரும் பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறைகளாக உள்ளன. இவர் ஆனி மாத மகம் நட்சத்திரத்தில் சிவபெருமானோடு இரண்டற கலந்தார் என சொல்லப்படுகிறது. எனவே இந்நாளில் சிவன் கோயில்களில் மாணிக்கவாசகருக்கு குருபூஜை நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மாணிக்கவாசகர் சன்னதியில் காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், பாராயணம், கூட்டுப் பிரார்த்தனை மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா மந்திர் ஆகியோர் செய்து வருகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்