கடலுார்; கடலுார், செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் வரும் 7ம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.
கடலுார் மாவட்டம், கடலுார் செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ள பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் கும்பாபிஷேக 22ம் ஆண்டு பூர்த்தி விழா நாளை மறுநாள் 7ம் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு அன்று காலை 6:30 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் 108 சங்கு பூஜை துவங்குகிறது. காலை 8:00 மணிக்கு மூலவர் அபிஷேகம், 9:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை, 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.