இருமுடி கட்டி.. 18 படி ஏறி சபரிமலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம்



திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு 18 படி அய்யப்பனை தரிசனம் செய்தார்.


நான்கு நாள் பயணமாக ஜனாதிபதி முர்மு, கேரள மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான இன்று அவர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்று, அங்கிருந்து காரில் பம்பை சென்றார். பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு அங்கிருந்து தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் கோவிலுக்கு சென்ற ஜனாதிபதி சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. ஜனாதிபதி ஒருவர், தன் பத வி காலத்தில் சபரிமலைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். ஜனாதிபதி சபரிமலைக்கு வருவதையொட்டி இரண்டு நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த இரண்டு நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பு உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதைத் தொடர்ந்து, கேரள கவர்னர் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் சிலையை அவர் நாளை திறந்து வைக்கிறார். இதைத் தவிர, மேலும் சில நிகழ்ச்சி களிலும் அவர் பங்கேற்கிறார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்