மூலநாதர் கோவிலில் ரதசப்தமி வழிபாடு



பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், ரதசப்தமியையொட்டி, சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் ரதசப்தமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:00 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணிக்கு ருத்ராபிேஷகம், அஸ்தர ஜபம் நடந்தது.

காலை 8:00 மணிக்கு சூரிய பகவானுக்கு, தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வந்த தீர்த்தம் மற்றும் பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரானை நடந்தது. சந்திரசேகரர், மனோன்மணியம்மன், அஸ்தரதேவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்