பொள்ளாச்சி குமரவேல் பழநி பாத யாத்திரை குழுவினர் சார்பில் தேரோட்டம்



பொள்ளாச்சி: பொள்ளாச்சி குமரவேல் பழநி பாத யாத்திரை அன்னதான குழுவினர், 15ம் ஆண்டு பாத யாத்திரையாக சென்றனர்.


பொள்ளாச்சி குமரன் நகரில், குமரவேல் பழநி பாதயாத்திரை அன்னதான குழு சார்பில், 15ம் ஆண்டாக பழநிக்கு பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 1ம் தேதி  குமரன் நகரில் இருந்து, பக்தர்கள் பழநிக்கு யாத்திரையாக சென்றனர். கடந்த, 3ம் தேதி பழநி சென்ற பக்தர்கள், காவடிக்கு சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. காவடியாட்டம் நடத்தப்பட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.  தொடர்ந்து, நேற்றுமுன்தினம் குமரன் நகரில், அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், முருகப்பெருமான் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை குமரவேல் பழநி பாத யாத்திரை அன்னதான குழு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்