காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா; பக்தர்கள் நேர்த்தி கடன்



காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.


இக்கோயிலில் மார்ச் 10ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுடன் பங்குனிவிழா துவங்கியது. முக்கிய நிகழ்வாக நாளை கரகம், மது முளைப்பாரி உற்ஸவமும், மார்ச் 18 அன்று பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி செலுத்துவர். அன்று மாலை பருப்பூரணியில் கரகம் சேர்த்தல், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும். இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நகர் வலம் வந்து நேர்த்தி செலுத்தினர். பக்தர்கள் பால் குடம், அக்னி சட்டியுடன் முத்தாலம்மன் கோயிலில் இருந்து தேவகோட்டை ரோடு, கொப்புடையம்மன் கோயில், முதல் போலீஸ் பீட், வ.உ.சி., ரோடு வழியாக ஊர்வலமாக சென்று முத்து மாரியம்மன் கோயிலில் நேர்த்தி செலுத்தினர். கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பால்குடம், அக்னி சட்டி எடுத்துவந்த பக்தர்களின் பாதங்களில் பஜார் பள்ளிவாசல் முன் இஸ்லாமியர்கள் தண்ணீர் அடித்து குளிர வைத்து அனுப்பினர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்