மன்னார்குடி வடுவூர் கோதண்ட ராமர் கோவிலில் கருட சேவை



மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், வடுவூர் கோதண்ட ராமர் கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழாவின் ஒரு பகுதியாக கருட சேவை நடைபெற்றது. இக்கோவிலில் ஸ்ரீராமன் நவமி விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக கருட சேவை நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து கருட வாகனத்தில் பரமபத நாதனாக அமர்ந்த திருக்கோளத்தில் கோதண்ட ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. பின்னர் கருட வாகனத்துடன் பெருமாளை சப்பரம் தேரில் எழுந்தருள செய்து கோவிலை வந்தடைந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோதண்டராமரை தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்