நத்தம் அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் பெருவேள்வி



நத்தம்: நத்தம் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் மதுரை மெய்ப்பொருள் விளக்க ஞானியர் பேரவை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவேள்வி நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஓய்வு பெற்ற கனிமவள இயக்குனர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஞானியர் பேரவை தலைவர் வழக்கறிஞர் செந்தில் ராமானுஜர் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகரால் அருளப்பட்ட சைவத் திருமுறையான திருவாசகத்தின் பாடல்களை ஞானியர் பேரவையை சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து முழுமையாகப் பாடி சிவபெருமானை வழிபட்டனர். மேலும் மன அமைதி,முக்தி மற்றும் ஞானம் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்