அத்திக்குன்னா பெரியாயி அம்மன் கோவில் திருவிழா துவக்கம்



பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திக்குன்னா ஸ்ரீ பெரியாயி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில், அருள்மிகு ஸ்ரீ பெரியாயி, ஸ்ரீ சடையனார், ஸ்ரீ தேவி காட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் வருடாந்திர திருவிழா நேற்று காலை, கணபதி ஹோமம், கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து இன்று காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் நள்ளிரவு, அம்மனுக்கு கிடா மற்றும் பன்றி பலி கொடுக்கும் பூஜைகளும் அதனைத் தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.கொடியேற்றத்துடன் துவங்கிய பூஜையில், கோவில் பூஜாரி ராதாகிருஷ்ணன், கோவில் கமிட்டினர் மற்றும் பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்