கம்பன் விழா இன்று நிறைவு



புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், நேற்று முன்தினம் துவங்கிய கம்பன் விழா இன்று நிறைவு பெறுகிறது.

விழாவின், 2ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு கம்பன் போற்றும் (வாய்மை, கடமை வீரம்) எனும் தலைப்பில் இளையோர் அரங்கம் நடந்தது. காலை 10:15 மணிக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 10:45 மணிக்கு ‘ராமன் சுக்ரீவனுக்கு வரம் கொடுத்தது குற்றம்’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது. இதில் நடுவராக இலங்கை ஜெயராஜ் பங்கேற்றார்.

பேராசிரியர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். வழக்கை தொடுப்பவராக பர்வீன் சுல்தானா, மறுப்பவராக சண்முக வடிவேல் பங்கேற்று பேசினர். மாலை 5 மணிக்கு ‘கம்பன் கண்ட மாண்பு’ என்ற கவியரங்கம் நடந்தது. 6:30 மணிக்கு சப்தகிரி சிவக்கொழுந்து, ராமலிங்கம் சகோதரர்கள் அறக்கட்டளை சார்பில் ‘காவியம் போற்றும் மேன்மை’ பட்டிமன்றம் நடந்தது. இதில் சப்தகிரி ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

நிறைவு நாளான இன்று காலை 9 மணிக்கு ‘கம்பனில் நான் கண்ட’ என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் நடக்கிறது. காலை 11 மணிக்கு நீதிபதி சுரேஷ்குமார் ‘தாழ்ந்தோர் உயர்வர்’ என்ற தலைப்பில் தனியுரையும், மாலை 4:30 மணிக்கு இளம்பிறை மணிமாறனின், காரணம் காரியமும் என்ற தலைப்பில் தனியுரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு நீதிபதிகள் ராமசுப்ரமணியன், ராமலிங்கம், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் முதல் நாள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு நடக்கிறது.

விழாவில், கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கம்பன் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்