கோவிலிலே பிரசாதம் தயாரித்து விற்பனை; 3 மாதத்தில் செயல்படுத்த அமைச்சர் உத்தரவு



சென்னை: ‘பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை, எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், கோவில் இணையதளம் வடிவமைக்கப்பட வேண்டும்’ என, கோவில் செயல் அலுவலர்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.


அமைச்சர் தலைமையில் நடந்த ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் வழங்கிய அறிவுரைகள்: ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலம் தொடர்பாக, திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்ட பின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தால், அவற்றை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ரத்து செய்து, திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியதும், அதன்படி செயல்பட வேண்டும் .


 ‘ஆன்லைன்’ தரிசன சீட்டு முன்பதிவு, பக்தர்கள் எளிதில் முன்பதிவு செய்யும் வகையில் இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும். தரிசன முன்பதிவிற்காகவே, தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்


l ஒரே தளத்தின் கீழ், பக்தர்கள் பயனுறும் வகையில், அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை மற்றும் சிறப்பு தரிசன சீட்டு வழங்க வேண்டும்


l கோவில் நன்கொடையாளர்களுக்கும், உள்ளூர் மக்களின் வழிபாட்டிற்காகவும், சிறப்பு தரிசன சீட்டு அல்லது தனியாக தரிசன நேரம் ஒதுக்க வேண்டும்


l கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்


l இணை ஆணையர் நிலையில் உள்ள கோவில்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதி தொடர்பான, முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்


l தேர் திருவிழாவின் போது, தேர் சக்கரங்களுக்கு அருகில் பக்தர் கள் நெருங்காதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்ய வேண்டும்.


கோவில் சார்பில் கும்பாபிஷேகம், தேர், தெப்பம் போன்ற திருவிழாக்களின் போது, மூன்றாம் நபர்கள் காப்பீடு செய்யப்பட வேண்டும்


l கோவிலில் உள்ள பிரசாத கடைகள் தொடர்பாக, பல புகார்கள் வந்தபடி உள்ளன. இவற்றை தவிர்க்க, கோவில் வளாகத்திற்குள் பிரசாதங்கள் தயாரித்து, பக்தர்களுக்கு வழங்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்குள், இதை செயல்படுத்த வேண்டும்


l கோவில் வளாகத்திற்குள் லட்டு, முறுக்கு போன்ற பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி, எத்தனை நாட்கள் பயன் படுத்தலாம் என்ற விபரங் களை கண்காணித்திட, கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். யாத்ரி நிவாஸ் மற்றும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை முன்பதிவு செய்யும் வகையில், கோவில் இணையதளம் வடிவமைக்கப்பட வேண்டும். கோவில்களில் உள்ள கழிப்பறைகள், தினசரி சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களை, மூன்று கால பூஜை நடக்கும் கோவில்களாக மாற்ற, அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்