கோவை ; ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் தீப ஒளியுடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.