அறநிலையத்துறையில் கூம்பு வடிவ இலச்சினை பூசாரிகள் சங்கம் கேள்வி!



பல்லடம்; தமிழக அரசு இலச்சினை இருக்க, ஹிந்து அறநிலையத்துறையில் மட்டும் கூம்பு வடிவ இலச்சினை கூடுதலாக பயன்படுத்தப்படுவது ஏன்? என, கோவில் பூசாரிகள் நலச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து அதன் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ‌ராஜகோபுரம், தேசியக்கொடி மற்றும் வாய்மையே வெல்லும் என்ற வாசகத்துடன் கூடிய தமிழக அரசின் இலச்சினைதான் பல ஆண்டு காலமாக தமிழக அரசின் இலச்சினையாக உள்ளது. அனைத்து அரசுத்துறையிலும் இந்த இலட்சினைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஹிந்து அறநிலையத்துறையில் மட்டும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, கூடுதலாக, கூம்பு வடிவ இலச்சினை பயன்படுத்தப்படுகிறது. முன்பு, அறநிலையத்துறை சார்பில் வெளியாகி வரும் திருக்கோவில் மாத இதழில் மட்டுமே இடம்பெற்று வந்த இந்த இலச்சினை, தற்போது, அறநிலையத்துறை சார்பில் வெளியாகும் டெண்டர் அறிவிப்புகள்,

பேனர்கள், ஏல அறிவிப்பு உள்ளிட்ட அனைத்திலும், தமிழக அரசு இலச்சினை உட்பட, மேற்குறிப்பிட்ட கூம்பு வடிவிலான இலச்சினையும் இடம்பெற வேண்டும் என, அறநிலையத்துறை சார்பில் வலியுறுத்தப்படுகிறது. மசூதி வடிவில் உள்ள இந்த கூம்பு வடிவ இலச்சினை அறநிலையத்துறையில் மட்டும் எதற்காக கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதர அரசு துறைகளைப் போன்று, அறநிலையத்துறையிலும், தமிழக அரசின் இலட்சினையை மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்