விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பனங்குப்பம் ஸ்ரீ பூரணி, புஷ்கலா சமேத அய்யனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்த மண்டலாபிேஷகம் துவங்கியது. இக்கோவிலில், கடந்த 25ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முதல் மண்டலாபிஷேகம் துவங்கியது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.