பாலக்காட்டில் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் விஜய யாத்திரை



பாலக்காடு: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் விஜய யாத்திரை, கடந்த ஜூலை 14ம் தேதி கேரள மாநிலத்தில் தொடங்கியது.


கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரத்தில், ஸ்ரீமத் ஆச்சார்யாள் அவர்களுக்குப் பாரம்பரிய முறைப்படி பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு, மாநிலத்திற்குள் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார். தொடர்ந்து பாலக்காடு நகருக்கு வருகை தந்த அவருக்கு, பாலக்காடு நகராட்சித் தலைவர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ராமநாதபுரம் கிராமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாலக்காடு கல்பாத்தி, சாத்தபுரம் அக்ரஹாரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் புதிய கிளையை ஸ்ரீமத் ஆச்சார்யாள் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வேத கோஷம், பஞ்சவாத்தியம் மற்றும் நாதஸ்வரம் முழங்க, பக்தர்களின் பக்திப் பரவசத்திற்கு மத்தியில் விழா கோலாகலமாக நடைபெற்றது. தமது விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக, பாலக்காடு மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அக்ரஹாரங்களுக்குச் சென்ற ஸ்ரீமத் ஆச்சார்யாள் அவர்கள், பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சாத்தபுரத்தில், சிறப்பு வேத மந்திரங்கள் மற்றும் பூஜைகளுக்குப் பிறகு, புனித நீளா நதியில் தட்சிணாயண புண்ணிய கால ஸ்நானத்தை மேற்கொண்டார். நதிக்கு மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நதிக்கரையில் அரச மற்றும் வேப்ப மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார். இறுதியாக, ராமநாதபுரம் வேத பாடசாலைக்குச் சென்ற ஸ்ரீமத் ஆச்சார்யாள், அங்குள்ள வேத மாணவர்களையும் பக்தர்களையும் ஆசீர்வதித்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்