கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்க பெருமாளுக்கு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள், பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது.
அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.