நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்



நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.


அதனையொட்டி, நேற்று மதியம் விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இரவு 8 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை வலம் வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்