பொள்ளாச்சி: ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு, பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குரும்பபாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில், சேரன் தொழிலாளர் காலனி செல்வ விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* வால்பாறை நகரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு பால், இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பூஜையையொட்டி சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
* கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில், கிருத்திகை நாளான நேற்று காலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில் உற்சவ மூர்த்திக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.