விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் வேணு கோபாலசாமி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. இதையொட்டி, வேணுகோபால சுவாமிக்கும், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை வரதராஜ பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலையில் பக்தர்கள் உறியடித்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினர். பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.