திருவதிகை சரநாராயண பெருமாள் கோடை உற்சவத்தில் அருள்பாலிப்பு



பண்ருட்டி:திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று கோடை உற்சவம் முன்னிட்டு உற்சவர் பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவையில் அருள்பாலித்தார்

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று கோடை உற்சவம் துவங்கியது. நாளை 25ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. அதனையொட்டி உற்சவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை உற்சவர் பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு உற்சவர் நாச்சியார்கள் சிறப்பு அலங்காரம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை 25ம் தேதி மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயாருடன் உபசார உற்சவத்தில் அருள்பாலிக்கிறார்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்