வேட்டையன்பட்டி வள்ளியங்கருப்பு கோயில் கும்பாபிஷேகம்



சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி வள்ளியங்கருப்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏப். 25ஆம் தேதி சேவுகப்பெருமாள அய்யனார் கோவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு வள்ளியங்கருப்பு, சின்னக்கருப்பு, ஆகாச வீரன், துவராள்பதி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்