மதுரை; சோழவந்தான் அருகே குருவித்துறையில் பாண்டிய நாட்டின் நவகிரக குருஸ்தலமாக விளங்கும் சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். இங்கு குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை வரும் 29ம் தேதி காலை துவங்கி, மே1ம் தேதி பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. குரு பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்து பரிகார ராசிகளுக்கு தனித்தனியாக அர்ச்சனை செய்யப்படுகிறது. விழாவில் குருப்பெயர்ச்சிக்கான பரிகார மஹா யாகபூஜையும், மஹாபூர்ணாஹீதி, திருமஞ்சன சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இதில் ரிஷபம், மிதுனம்,சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய பரிகார ராசிகாரர்கள் சங்கல்பம் பூஜை செய்துகொள்ளலாம்.