கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் மே 1ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை



கோவில்பாளையம்; கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் வரும் மே 1ம் தேதி குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நடக்கிறது.

கொங்கு நாட்டு குரு பரிகார ஸ்தலம் மற்றும் மேலை திருக்கடையூர் என்று அழைக்கப்படுவது கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில். வருகிற மே 1ம் தேதி மாலை 5:19 மணிக்கு, குருபகவான், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, இக்கோவிலில் அன்றைய தினம் மதியம் 3:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை துவங்குகிறது. தட்சிணாமூர்த்திக்கு, அபிஷேக பூஜை, கலச அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. மே 2ம் தேதி காலை 8:30 மணிக்கு, துவங்கி, மே 3ம் தேதி இரவு 7:00 மணி வரை, லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பக்தர்கள், குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழாவில், பங்கேற்று, இறையருள் பெற, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்