சிந்தாதிரிப்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பபாபிஷேக விழா



சிந்தாதிரிப்பேட்டை, வைரமுருகன் என அழைக்கப்படும் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெருவில், பிரசித்தி பெற்ற வைரமுருகன் என அழைக்கப்படும் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 24ம் தேதியன்று விக்னேஷ்வரா பூஜை, கோ பூஜையை தொடர்ந்து யாகசாலை அலங்காரம் ஆகியவை நடந்தது. அதைத் தொடர்ந்து, மறு நாள் இரண்டாவது கால யாக சாலை பூஜை மற்றும் ஹோமம் நடந்தது. நேற்று காலை, நான்காவது கால யாக சாலை பூஜை மற்றும் ஹோமம் நடந்ததை தொடர்ந்து, அனைத்து கோபுரங்கள், ராஜகோபுரம் ஆகியவற்றில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், பரம்பரை தர்மகர்த்தா பார்வதி பாய் தலைமை தாங்கினார். ராஜகோபுரத்தில் இருந்து, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருக்கல்யாண வைபவம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவில் வளாகம் முன் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்