திருப்பாவையில் கூறிய திவ்ய தேசங்கள் எவை தெரியுமா?



திருப்பாவையில் கோதை எந்த எந்த திவ்ய தேச எம்பெருமானை கூறினார் தெரியுமா..

1. மார்கழித் திங்கள் - நாராயணனே நமக்கே பறை  தருவான் - பரமபதம்.

2. வையத்து - பாற்கடலில் பையத் துயின்ற - க்ஷீராப்தி.

3. ஓங்கி - ஓங்கி உலகளந்த உத்தமன் - திருக்கோவலூர்.

4. ஆழிமழை  - பாழியம் தோளுடை பத்மநாபன் - திரு அனந்தபுரம் .

5. மாயனை - வடமதுரை மைந்தன் - மதுரா .

6. புள்ளும் - வெள்ளத்ரவில் அமர்ந்த வித்து - திருவண் வண்டூர்.

7. கீச்சு கீச்சு - கேசவனைப் பாடவும் - திருவாய்ப்பாடி.

8. கீழ்வானம் - தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் - வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சி.

9. தூமணி மாடம் - குன்றின்மேல் விளக்கு - திருக் கடிகை.

10. நோற்று சுவர்க்கம் - நாற்றத் துழாய்முடி நாராயணன் - திருக்காட்கரை.

11 கற்றுக் கறவை - முகில் வண்ணன் பேர் பாட - காளமேகப் பெருமாள் திருமோகூர்.

12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திரு சித்திர கூட்டம்.

13. புள்ளின்வாய் - பள்ளிக் கிடத்தியோ - திருக்குடந்தை.

14. உங்கள் புழக்கடை - நாவுடையாய் - செந்தமிழும் வடுக்கலையும் திகழ்ந்த நாவர் - தேரழுந்தூர்.

15. எல்லே - மாற்றாரை மாற்றழிக்க வல்லான் மாயன் - திருவல்லிக்கேணி.

16. நாயகனாய் - மாயன் மணிவண்ணன் - திருக்குறுங்குடி.

17. அம்பரமே - அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் - சீர்காழி.

18. உந்து மத களிறு - பந்தார் விரலி மைத்துனன் - திருநறையூர்.

19. குத்து விளக்கு - மலர்மார்பா - திருவிடவெந்தை.

20. முப்பத்து மூவர் - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் - திருப்பாடகம்.

21. ஏற்ற கலங்கள் - ஊற்றமுடையாய் பெரியாய் - பெரும்புறக் கடல் - திருக்கண்ண மங்கை.

22. அங்கண்மா ஞாலம் - அரசர் அபிமான பங்கமாய் வந்து தலைப்பெய்து - திருமாலிருஞ் சோலை.

23. மாரி மலை முழஞ்சில் - பூவை பூ வண்ணா - திருவரங்கம்.

24. அன்றிவ் உலகம் - குன்று குடையாய் - கோவர்த்தனம்.

25. ஒருத்தி - கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால் - திருக்கண்ணபுரம்.

26. மாலே மணிவண்ணா - ஆலின் இலையாய் - பூரி ஜெகன்நாதர்.

27 கூடாரை வெல்லும் - சீர் கோவிந்தா - (திருவேங்கடம்).

28 கற்றுக் கறவை - குறை ஒன்றுமில்லாத கோவிந்தா - (விருந்தாவனம்)

29 சிற்றம் சிறுகாலை - பறை கொள்வான் கோவிந்தா - (துவாரகை.)

30)வங்கக் கடல் - அணிபுதுவை - (ஸ்ரீவில்லிபுத்தூர்).

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்