பழமை வாய்ந்த கொளத்துார் செல்லியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா



திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த ஆக., 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, தினமும் மாலை மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. 27வது நாளான மண்டலாபிஷேக விழா, நேற்று இரவு நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 300 சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது. இதில், கொளத்துார், மாம்பாக்கம், பனங்காட்டுப்பாக்கம் கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்