ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தைப்பூச தெப்ப உற்ஸவம்



ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உபகோயிலான லட்சுமணேஸ்வரர் தீர்த்த குளத்தில் தைப்பூச தெப்ப உற்ஸவம் நடந்தது. தைப்பூச தெப்ப திருவிழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகினர். காலை 11:30 மணிக்கு உபகோயிலான லட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு இரவு 7:00 மணிக்கு தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தைப்பூச தெப்பத் தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். அப்போது கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்கள் தேரின் வடத்தை இழுத்து 11 முறை தெப்பத்தை வலம் வந்தனர். அப்போது சுற்றிலும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்