இன்று பவுர்ணமி; இறைவனை வழிபட்டு மனோபலம் பெறுவோம்..!



வழிபாட்டுக்குரிய மிக சிறந்த நாள் பவுர்ணமி. சந்திரன் வழிபாடு காலத்தை கடந்த பழமையானதாகும். பவுர்ணமியில் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேர்பார்வையில் வீற்றிருப்பர். பவுர்ணமியில் சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம்.


ஆன்மிகத்தில் உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் முக்கியம். உள்ளம் தனது எண்ண ஓட்டங்களை இழுத்துப் பிடித்து ஒருமுகப் பட்டால்தான் ஆற்றலுடன் விளங்க முடியும். இதற்கு சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். அதன் குளிர்ந்த கிரணங்கள் நம்மைச் சுற்றி உள்ள பிரதேசங்களை மட்டுமின்றி நமது தேகத்தையும் ஊடுருவும். நம்முடைய உடம்பும் உள்ளமும் ஆன்மாவும் கிரணங்களால் கழுவப்பட்டு தூய்மை அடையும். சராசரி மனிதன் சந்திரனின் அற்புத சக்தியை அத்தனை எளிதாய் கிரகித்துக் கொள்ள முடியாது. ஆனால் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால், சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இதனால் பாவங்களைப் போக்கி, பிணிகளை அகற்றும். தோஷங்கள் நீங்கும். மானிட சக்தி பரிபூரணமாய் கிடைக்கும் என்பது திண்ணம். வீட்டில் விளக்கேற்றி இறைவழிபாடு செய்வது நல்ல பலன் தரும்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்