காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவத்தை அடுத்து வரும் நாளில், வேகவதி தெருவில் அமைந்துள்ள தோட்டத்தில், பெருமாள், உபய நாச்சியாருடன் எழுந்தருளி தோட்ட உத்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 5:30 மணிக்கு வரதராஜ பெருமாள், உபய நாச்சியாருடன், வெங்கடாத்ரி கொண்டை அலங்காரத்தில் தங்க பல்லக்கில், சேனை முதன்மையாருடன் சன்னிதி தெரு, நான்கு மாட வீதிகள் வழியாக வேகவதி தெருவில் அமைந்துள்ள தோட்டத்திற்கு சென்றடைந்தார். அங்கு காலை 11:00 மணியளவில் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜை நடந்தது. தொடந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணியளவில், வரதராஜ பெருமாள், உபயநாச்சியார் பன்னீர் ரோஜா மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தி உலாத்தல் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.