எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்



பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, இன்று காலை கொடி மரத்தில் கருட கொடியேற்றப்பட்டது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை பெருமாள் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்தார். இதேபோல் தினமும் காலை, மாலை பல்லாக்கு, சிம்மம், சேஷ, கருட, அனுமந்த மற்றும் யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளார். முக்கிய விழாவாக ஜூன் 6 காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணமும், அன்று இரவு பூப்பல்லக்கில் வீதி வலமும் நடக்கிறது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் திருமங்கையாழ்வார் வேட பரியாகம் நடக்கும். ஜூன் 8 மாலை 6:00 மணிக்கு தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி தொடர்ந்து இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்