திருத்தணி; திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு அர்ச்சுனன், திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. வரும் 5ம் தேதி அர்ச்சுனன் தபசும், 8ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது. வரும் 9ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.