தி.வைரவன்பட்டியில் 28 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு; பக்தர்கள் வழிபாடு



திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே தி.வைரவன்பட்டியில் தண்ணீர் அய்யனார் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா 28 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. இக்கிராமத்தில் 28 ஆண்டுகளாக புரவி எடுப்பு நடை பெறவில்லை. இந்த ஆண்டு கிராமத்தினர் விழா எடுக்க முடிவு செய்தனர். புரவி எடுப்பை முன்னிட்டு கிராமத்தினர் பிப்.10 ல் பிடிமண் கொடுத்தனர். மே 23 ல் சேங்காய் வெட்டுதல் நடந்தது. மே 30ல் புரவி காகட்டுவதும், புரவிகளுடன் கிராமத்தினர் ஊர்வலமாக சவுக்கை பொட்டலுக்கு வந்தனர். தொடர்ந்து புரவிகளுக்கு தீபாராதனை நடந்தது. இன்று மாலை புரவி பொட்டலிலிருந்து கிராமத்தினர் புரவிகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு புரவிகளை அமர்த்தி விட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. சுற்று வட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்