வடமதுரை கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்



வடமதுரை; வடமதுரை அருகே கோவில் திருவிழாவில், துடைப்பத்தை கொண்டு அடித்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வு நடந்தது. அய்யலுார் தீத்தாகிழவனுாரில் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா, ஜூன் 1 இரவு, கரகம் பாலித்தலுடன் துவங்கியது. இதில், பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி உள்ளிட்டவை நடந்த நிலையில், பழைய சாதத்தை துடைப்பத்தில் தொட்டு, உறவினர் தலையில் அடிக்கும் வினோத நேர்த்திக்கடன் வழிபாடும் நடந்தது. இவ்விழாவின் இறுதி நாளான நேற்று, சேத்தாண்டி வேடம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் அம்மன் தரிசனம் முடித்து, உடலில் சேறு, கரி பூசிக்கொண்டு கோவில் மைதானத்தில் அமர்ந்தனர். கழநீர் தொட்டியில் சேகரித்த பழைய சாதத்தை, மண் பானைகளில் ஊற்றி துடைப்பத்தை அதில் தொட்டு, பக்தர்கள் மீது, உறவினர்கள் அடித்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின், பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயில் குளத்தில் குளித்தனர். சகிப்புத்தன்மை அதிகரித்து, சண்டை, பிரச்னையின்றி உறவினர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னோர்களின் ஏற்பாடாக இந்த வழிபாடு நடப்பதாக மக்கள் தெரிவித்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்