பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


அதனையொட்டி நேற்று அதிகாலை சுப்ரபாத சேவை, விஸ்வரூப தரிசனம், காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து தாயார் மண்டபத்தில் உபயநாச்சியார் சகிதம் பெருமாள், உற்சவர் சுவாமிகளை எழுந்தருள செய்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது.


சர்வ அலங்காரத்திற்குப் பின் திருக்கல்யாணம் துவங்கியது. விஸ்வக்சேனர் வழிபாடு, அங்குரார்ப்பணம், பகவத் சங்கல்பம் உள்ளிட்ட பூஜை நடந்தது.


யாகம் பூர்த்தி செய்தபின் பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவம் நடந்தது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்