உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஜக்கம்மாள் வழிபாடு



உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி ஜக்கம்மாள் கோயிலில் நடந்த வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.


எருமார்பட்டி ஜக்கம்மாள் கோயிலில் மாட்டுப் பொங்கலன்று நடக்கும் விழாவில் ஆண்களும், சிறுவர், சிறுமிகளும் மட்டுமே கலந்து கொள்கின்றனர். வாகை மரத்தின் அடியில் உள்ள ஜக்கம்மா சிலைக்கும், மரத்திற்கும் பக்தர்கள் கொண்டு வரும் ஆடைகள், வெள்ளைத்துணி, தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.


நாயக்கர்கள் காலத்தில் ஜோதில்நாயக்கனுார் ஜமீனைச் சேர்ந்தவர்கள் அந்த ஊரில் பிறந்த ஜக்கம்மாவை பெண் கேட்டனர். திருமணம் செய்ய மறுத்து எருமார்பட்டி அருகே உள்ள மலையிலிருந்து குதித்து ஜக்கம்மாள் இறந்து போனார். உடலை எருமார்பட்டியைச் சேர்ந்தவர்கள் எடுத்து இப்பகுதி மயானத்திற்கு கொண்டு வரும்போது வாகை மரத்தடியில் வைத்து எரியூட்டும்படி ஜக்கம்மாள் கேட்டுக்கொண்டார். அதன்பின், தான் இங்கு தெய்வமாக இருப்பதாகவும் ஆண்டுதோறும் தான் இறந்த நாளில் வழிபாடு நடத்தும்படியும், தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சித்த ஜமீன் பூமியில் ‘மலையளவு எள் விளைந்தாலும் கடுகளவு கொள்ளு விளையாது என அருள்வாக்கு கூறியுள்ளார். அதன்படி எருமார்பட்டி பக்தர்கள் ஆண்டுதோறும் வழிபடுகின்றனர். ஜக்கம்மாள் வாக்குப்படி இந்த பகுதியில் யாரும் கொள்ளு பயிரிடுவது இல்லை. கோயில் பகுதியில் சுடுகாடு இருந்ததால் அக்காலத்தில் இருந்து பெண்கள் வழிபாட்டில் பங்கேற்பதில்லை. வழிபாட்டில் கலந்து கொண்டால் நினைத்த காரியம் நிறைவேற ஜக்கம்மாள் அருள் புரிவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்