பழநி; பழநி முருகன் கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் பாரவேல் மண்டபத்தில் நேற்று மாசி மகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. 1008 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. இதில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குருக்கள் குழுவினர் பங்கேற்றனர். அதன் பின் உச்சிக்கால பூஜையில் யாகத்தில் வைக்கப்பட்ட சங்கு நீர், கலச நீர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் சுப்புராஜ், காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி அம்மன் அறக்கட்டளை சுந்தரம் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.