திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி; திரளான பக்தர்கள் தரிசனம்



மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க தலங்களில்  ஒன்றானதும், சயன கோலத்தில் ரங்கநாதர் 12 அடி நீள பச்சை நிறத் திருமேனியுடன் தலைப்பக்கம் காவிரி கால் பக்கத்தில் கங்கை நதியுடன் காட்சி தருவதும், ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான மயிலாடுதுறை திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் தாயாருடன் நேற்று இரவு கோவிலில் இருந்து பல்லாக்கில் புறப்பட்டு தருமக்குளம் பெருமாள் கோவிலில் எழுந்தருள சாற்று முறை செய்யப்பட்டது தொடர்ந்து தாயார் சமேத பரிமள ரங்கநாதர் காவிரி சங்கமத்துறையில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் அஸ்திர தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு தீர்த்தவாரி  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பெருகுடன் ரங்கநாத ரங்கநாதா என கோசமிட்ட படி காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் நீராடி பெருமாளை சேவித்தனர். தொடர்ந்து 108 திவ்ய தேசங்களில் 25ஆவது தலமான தலைச்சங்காடு நாண்மதிய பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் காவிரி சங்கமத் துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்