பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி யானை வாகனத்தில் ஐயன் உலா வந்தார். கோயிலில் காலை துவங்கி அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஐயப்பன் யானை வாகனத்தில் தவக்கோலத்தில் அமர்ந்தார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து இரவு 11:00 மணிக்கு கோயில் அடைந்தார். பின்னர் பஜனை அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மசாஸ்தா சேவா சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.