குன்னூரில் முத்துப்பல்லக்கு கோலாகலம்: சயன கோலத்தில் அருள்பாலித்த அம்மன்



குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் 81வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவ விழாவில் சயன கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான முத்துப் பல்லக்கு ஊர்வலம் இன்று நடந்தது. விழாவில் குன்னூர் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, தேவி ரக்ஷா மற்றும் முத்துகாளைகளுடன், கும்ப கலசம் மற்றும் அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக தந்தி மாரியம்மன் கோவில் எடுத்துவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் அம்மன் திருவீதி உலாவில், அம்மன் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கருட மகா விஷ்ணு, அனுமன் வடிவமைப்புகள் முன்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நின்று புகைப்படம் எடுத்தனர். இன்னிசை நிகழ்ச்சி வானவேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அருவங்காடு நாட்டிய நடன மாணவிகள் அம்மன் பாடல்களுக்கு ஏற்ப ஆடிய பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்