கேசம்பள்ளி: தங்கவயலின் கிழக்கில் கேசம்பள்ளி அருகே மடிவாளா கிராமத்தில் ஸ்ரீ பார்வதம்பா சமேத ஸ்ரீ சுயம்பு புவனேஸ்வர சுவாமி கோவில் என்ற பெயரில் சோழர் காலத்து பழமையான சிவன் ஆலயம் உள்ளது. இது, கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இக்கோவிலின் பிரமோத்சவம் நேற்று, 17ம் தேதி துவங்கியது. இம்மாதம், 26ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலையில் அபிஷேகம், அலங்காரம், கணபதி பிரார்த்தனை, துவஜ ரோஹணம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகத்திற்கு பின், சிம்ம வாகன உத்சவம் நடந்தது. இன்று சந்திரமண்டல உத்சவம், 19ம் தேதி சேஷ வாகன உத்சவம்; 20ம் தேதி காலையில் கிரிஜா கல்யாண உத்சவம், 21ம் தேதி பிரம்ம ரத உத்சவம், 22 ம் தேதி பார்வடோத்சவம் நடக்கிறது. 23ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகள், வசந்த உத்சவம், ஹம்ச வாகன உத்சவம்; 24ம் தேதி காலை முதல் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், பிரசாத வினியோகம், மதியம் அன்னதானம், மாலையில் பக்தி இசை கச்சேரி, இரவில் புஷ்ப பல்லக்கு நடக்கிறது. விழா நாட்களில் காலையில் அபிேஷகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.