சோளீஸ்வரர் கோவில் திருக்குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை



திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் கோவில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் குளம் குபேரன் வழிபட்ட தலம் என்பது வரலாறு. தற்போது. இக்கோவிலின் குளத்தின் படிகள், சுற்றுச்சுவர் 5 ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடை ந்தது. இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராட முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே, சோளீஸ்வரர் கோவில் குளத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்