திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்காடு குப்பம் சோளீஸ்வரர் கோவில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் குளம் குபேரன் வழிபட்ட தலம் என்பது வரலாறு. தற்போது. இக்கோவிலின் குளத்தின் படிகள், சுற்றுச்சுவர் 5 ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடை ந்தது. இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராட முடியாமல் திரும்பி செல்கின்றனர். எனவே, சோளீஸ்வரர் கோவில் குளத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.