குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்



குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவில், நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் இருந்து, பால்குட ஊர்வலம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலம் நடந்தது. இதில், நகராட்சி ஊழியர்கள் முதுகில் அலகு குத்தி, அதில் இளநீர் காய்களை இழுத்தும், பறவை காவடியாகவும் வந்தனர். மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அன்னதானம். இன்னிசை நிகழ்ச்சி, வானவேடிக்கை நடந்தன. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்