மயிலம்: மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் வசந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது.
வசந்த விழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. நேற்று நிறைவு நாள் விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வசந்த விழா நிறைவையொட்டி, சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடந்தது. இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணியர் சுவாமி கிரிவலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.