மயிலத்தில் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் வசந்த விழா நிறைவு



மயிலம்: மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் வசந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது.

வசந்த விழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. நேற்று நிறைவு நாள் விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.

மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வசந்த விழா நிறைவையொட்டி, சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு நடந்தது. இரவு 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணியர் சுவாமி கிரிவலம் வந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்