மானாமதுரை கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் கோயிலில் கும்பாபிஷேகம்



மானாமதுரை; மானாமதுரை அருகே மே.மீனாட்சிபுரத்தில் உள்ள கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் கோயிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேகத்திற்காக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.இதனைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி முடிவடைந்த உடன் புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் மேள,தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் நடந்தது. இரவு சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஷ்டிகள்,நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்