பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடந்தது.
பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு நடந்தது. சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி, கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உற்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.