கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் இறைவனோடு கலந்த, ஆனி மாதம், மகம் நட்சத்திரத்தையொட்டி குருபூஜை வழிபாடு நடந்தது. இதையொட்டி, மாணிக்கவாசகர், மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் திருவாசக முற்றோதல் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.